Showing posts with label விளையாட்டு. Show all posts
Showing posts with label விளையாட்டு. Show all posts

Wednesday, August 11, 2010

ராக தீபம் ஏற்றும் நேரம்...!




இசைப் பிரிய‌ர்க‌ளுக்கு, குறிப்பாக‌ இளையராஜா ரசிகர்களுக்கு (வெறியர்கள்!)ஒரு விளையாட்டு.


இந்த ராகம், ராகம்னு சொல்றாங்களே, அதை நமக்குப் பிடிச்ச பாட‌ல்க‌ளில் நாமளும் கண்டுபிடிக்க ட்ரை பண்ணலாமா? ஆனா இந்த விளையாட்டுக்கு ராகங்கள் பற்றித் தெரியவேண்டாம்; அதன் பேர்கள் கூடத் தெரியவேண்டாம்; நுட்பமான இசை ரசனை இருந்தாப் போதும். இது இளையராஜா ரசிகர்களுக்கு இல்லாம போகுமா?!


ஏன்னா அவ‌ர் ப‌ல‌ அழ‌கான‌ ராக‌ங்க‌ளைப் ப‌ல‌ பாட‌ல்க‌ளில் பல‌ வித‌மா ப‌ய‌ன்ப‌டுத்தி இருக்காராம்.


எடுத்துக்காட்டாக "அம்மா என்றழைக்காத..." பாட்டும் "ஜனனி ஜனனி" பாட்டும் ஒரே ராகம். கேட்டுப் பாருங்க புரியும்; ஒரே மாதிரி ஃபீல் கிடைக்கும்.
அதே மாதிரி இப்ப நான் கண்டுபிடிச்சது என்னன்னா, "சின்னா மணிக் குயிலே" பாட்டும் "சந்தைக்கு வந்த கிளியும்" ஒரே மாதிரி இருக்கு. ஹை!

அதே மாதிரி "சொர்க்க‌மே என்றாலும்" பாட்டும் "தென்ற‌ல் வ‌ந்து என்னைத் தொடும்" பாட்டும் ஒரே ராகம்.

சன்டிவி சப்தஸ்வரங்கள் நிகழ்ச்சியில் இந்த‌ மாதிரி பாட்ல்களைக் கோத்துப் பாடுவ‌து ஒரு சுற்றாக‌வே வைக்க‌ப்ப‌ட்டிருந்த‌து நினைவிருக்க‌லாம்.

இப்போ நாம் இப்படி ஒரே மாதிரி தொனிக்கிற பாட்டுக்களை லிஸ்ட் பண்ணலாமா?

ஸ்டார்ட் ம்யூஸிக்!!! (Literally!)

ராகங்கள் பற்றிய பயிற்சியும் தெரிவும் உள்ளவர்கள் உள்ளவர்கள் கலந்து கொண்டு திருத்தங்கள் சொல்ல வேண்டுகிறேன். என்ன ராகம் என்று சொன்னால் அதையும் தெரிந்து கொள்ளலாம். ஒரே பாட்டில் கலவையான ராகங்கள் இருப்பின் அதையும் சொல்ல‌ வேண்டுகிறேன்! Volunteer judges are most welcome.

Friday, August 6, 2010

ஃபோட்டோ விளையாட்டு!

இந்தப் படத்தில் பல துறைகளை, காலங்களைச் சார்ந்த 100 பிரபலங்கள் இருக்கிறார்கள். குறைந்தத் 25 பேரைக் கண்டுபிடிக்க முடிந்தால் நமது காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளலாமாம்!

ம்..ஸ்டார்ட் ம்யூஸிக்! (படத்தைப் பெரிதாக்க அதன் மீது சொடுக்கவும்)

(பி.கு. பரிசு எதுவும் அறிவிக்கவில்லை, ஏனெனில் என்னிடம் விடைத்தாள் இல்லை!)

Thursday, June 10, 2010

மழையே! மழையே!!

மழையை ரசிக்காதவர்கள் உண்டா?க‌டும் புய‌ல் ம‌ழையினாலும் வெள்ள‌த்தினாலும் பாதிப்புக‌ள் ஏற்ப‌டும் போதும் ம‌ழையைச் ச‌பித்தாலும்...வெப்ப‌த்தால் வாடி வெடித்திருக்கும் பூமி முத‌ல் மழையின் ஈர‌த்தைத் தாப‌த்துட‌ன் உறிஞ்சி மேனி சிலிர்த்து மணம் வீசும் போது... ஆஹா!
ம‌ழையில் ந‌னைவ‌து: என‌க்கு ரொம்ப‌ ஆசை. ஆசை தீர‌ நிறைய‌வே ந‌னைந்திருக்கிறேன். அதுவும் பெரும‌ழையின் போது ம‌ழைத்துளிக‌ள் சுள் சுள்ளென்று ஊசி போல் உட‌லைக் குத்துவ‌தை உண‌ர்ந்திருக்கிறீர்க‌ளா? குடையின்றி முற்றாக‌ ம‌ழையில் நனையும் சுக‌த்தை அதை அனுப‌வித்தால் தான் புரியும். அலுவலுக்குச் செல்லும் அவசரத்தில் அரைகுறையாக‌ ந‌னைவ‌து தான் எரிச்ச‌ல்!

ச‌ரி, விஷயத்துக்கு வ‌ருவோம். கீழே உள்ள‌ ப‌ட‌ங்க‌ளைப் பார்த்து ர‌சித்த‌ பின் அவ‌ற்றுக்குப் பொருத்த‌மான, உங்கள் நினைவுக்கு ச‌ட்டென்று வ‌ரும் த‌மிழ்த் திரைப்ப‌ட‌ப் பாட‌ல்வ‌ரிகளைப் பின்னூட்டத்தில் சொல்லுங்க‌ள். மிக‌வும் சிறந்த பின்னூட்டத்துக்கு ஒரு ச‌ர்ப்ரைஸ் ப‌ரிசு காத்திருக்கிற‌து!
Ok... ஸ்டார்ட் ம்யூஸிக்!


(பி.கு: க‌விஞ‌ர்க‌ள் க‌விதை கூட‌ச் சொல்ல‌லாம். ஆனால் அவை போட்டியில் சேர்த்துக் கொள்ள‌ப் ப‌ட மாட்டா!)