அளித்த முல்லைக்கு மனமார்ந்த நன்றிகள்.
Scrumptious blog விருதை இவர் எனக்குத் தந்து சில நாட்களாகின்றன. முன்னம் ஒரு முறை சுவாரசிய வலைப்பதிவு விருது தந்த போது அதைப் பதிவிடவும் பகிரவும் வாய்ப்பு அமையவில்லை. அதற்கும் சேர்த்துப் பன்மடங்கு உவகையுடன் இந்த விருதை இப்போது நான் கொடுக்க விரும்புவது:
நேசமித்ரன் - நேசமும் நேட்டிவிட்டியும் நீங்காமல் நிறைந்திருக்கும் கவிதைகளுக்காக!
அய்யனார் - எழுத்தில் வெளிப்படும் அறச்சீற்றத்துக்காக!
ஆசிப்மீரான் - வாஞ்சையான நெல்லை மொழியில் இவர் எழுதும் எதற்காகவும்!
அமிர்தவர்ஷினி அம்மா - அமித்துவுக்கு மட்டுமல்ல தனது கதை மாந்தர்களுக்கும் காட்டும் தாயன்புக்காகவும், படிப்பவர் மனதோடு சட்டென்று நெருங்கி வசியப்படுத்தும் எழுத்து வன்மைக்காகவும்!
செந்தில்வேலன் - ”பயனில சொல்லாமை” என்பதற்கு ஏற்ப, அனைவருக்கும் பயனுள்ள சிறந்த பல தகவல்களுடன் ஒவ்வொரு பதிவையும் எழுதும் பாங்குக்காக
காமராஜ் - சமூக சிந்தனை மிளிரும் மிகச்சில சிறந்த பதிவுகளுள் முக்கியமான ”அடர்கருப்பு” க் காக
அன்பு வாழ்த்துக்கள் அனைவருக்கும்!
:)