Tuesday, April 5, 2016

சபிக்கப்பட்ட தேவதை


பித்தேறிய‌ அழுத்தத்தில் ஓடுகின்ற‌ குருதி, 
ரணங்களின் பாரத்தில் துடிக்கின்ற‌ இதயம்,
கைக்கிளை நினைவுகளில் புடைத்து நிற்கும் நரம்புகள், 
சிறுநொடிப் பார்வையில் செயலிழக்கும் நாடி,
அத்தனையும் சமநிலை, அவளுடலகராதியில்;
உயிர் தீண்டும் காதலொன்றை வேண்டாது பெறுகையில்,
நிலை குலைந்து மூச்சு முட்டித் திண்டாடி விடுகிறாள்;
தருவதில் செழிக்கும் உயிர் பெறுவதில் சிதைகிறது;
உன்மத்தக் கூத்தாடி ஊடல் கொண்டு போராடி,
வந்ததைக் கொன்றொழித்து இன்னுயிர் மீள்கிறாள்!

No comments: