Wednesday, September 29, 2010

வாசம்




பருவத்தில் தோன்றி உதிர்ந்த மலர்களை
ஆழத் தோண்டி ஆங்கே புதைத்து வைத்தேன்;
நெடுங்காலம் சென்றபின் அன்றொரு நாள் ந‌டுநிசியில்
யாரும் காணாமல் அக‌ழ்ந்தெடுத்து நுக‌ர்ந்தேன்
ம‌ண்ணுக்குள்ளே க‌னியாகி ம‌துவாகிக் கிட‌ந்த‌து;
ஒரு போதும் அருந்திடவே இய‌லாதென்றாலும்
மூடுவதிலும் திற‌ப்பதிலுமே போதையேறிப் போகிற‌து.

22 comments:

R. Gopi said...

நல்லாதானே இருக்கு.

இதுக்குக் கொடுமைன்னு லேபல் வெச்சதுதான் கொடுமை.

(நாங்க எக்ஸாம் கொஸ்டின் பேபர்லையே முதல்ல பாக்குறது PTO இருக்கா இல்லையான்னுதான். தொட்டில் பழக்கம்:)

சி. சரவணகார்த்திகேயன் said...

That's a nice one..
added it to the படித்தது / பிடித்தது series in my blog..
http://www.writercsk.com/2010/09/89.html

சென்ஷி said...

செம்ம சூப்பர்.. நிஜம்மாவே ரொம்ப நல்லா இருக்குது...

சந்தனமுல்லை said...

ஹேய்...கூல் கவிதை அல்லது கொடுமை அல்லது எது வேண்டுமானாலும்...:))

நல்லாருந்துச்சு..

'பரிவை' சே.குமார் said...

நல்ல கவிதை... வரிகளை பிரித்து இட்டிருக்கலாம்... ஆமா இதற்கு எதுக்கு கொடுமையின்னு லேபிள்..?????

சிந்தையின் சிதறல்கள் said...

அருமை வாழ்த்துக்கள்

அம்பிகா said...

நல்லாயிருக்கு தீபா.

கவி அழகன் said...

திறமான தரமான கவிதை
வார்த்தைகளும் கருத்துக்களும் அழகு
வாழ்த்துக்கள்

மாதவராஜ் said...

அடேயப்பா! நிஜமாகவே கவிதைதான்.
வாழ்த்துக்கள்.

Sriakila said...

சூப்பர் தீபா!

VELU.G said...

ரொம்ப அருமை

ponraj said...

"வாசம்" அருமை!!!

கொடுமை அல்ல!!

யாத்ரா said...

இந்தக்கவிதை எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது, அருமையான கவிதை.

Gokul Rajesh said...

aahaa... question paper-a latin-la set panna eppadi!!!

சொற்சுவை அருமையாக இருக்கிறது... அர்த்தம் தான் புரியவில்லை.

Deepa said...

நன்றி கோபி ராமமூர்த்தி!
கவிதை மாதிரி ஏதாச்சும் கிறுக்கினா அந்த லேபில் போடுறது பழக்காமாயிடுச்சு.

மிக்க நன்றி சரவணகார்த்திகேயன்!

ந‌ன்றி சென்ஷி!

ந‌ன்றி முல்லை!

ந‌ன்றி சே.குமார்!
ப‌ட‌ம் போட்ட‌வுட‌ன் வ‌ரிக‌ள் ஒழுங்க‌ற்று ம‌ட‌ங்கி விட்ட‌ன‌.

ந‌ன்றி நேச‌முட‌ன் ஹாசிம்!

ந‌ன்றி அம்பிகா அக்கா!

ந‌ன்றி யாத‌வ‌ன்!
(க‌விக்கிழ‌வ‌ன் தானே?)

ந‌ன்றி அங்கிள்!
நீங்க‌ளே சொன்னா ச‌ர்தான் :)

ந‌ன்றி அகிலா!

ந‌ன்றி வேலு!

ந‌ன்றி பொன்ராஜ்!

ந‌ன்றி யாத்ரா!
க‌விதையில் உன்னதத்தின் உச்சம் தொட்டிருக்கும் உங்க‌ள் பாராட்டு ரொம்ப‌ ச‌ந்தோஷ‌ம‌ளிக்கிற‌து.

ந‌ன்றி கோகுல்!
நீ சின்ன‌வ‌ன், சின்ன‌வ‌னாவே இரு! (நன்றி: ஹீரோ ஹோன்டா ப்ளெஷ‌ர் விள‌ம்ப‌ர‌ம்!)
சும்மா சொன்னேன். சில காலம் சென்றால் உனக்கு அர்த்த‌ம் புரியலாம் கோகுல். ரொம்ப கஷ்டமான க‌விதையெல்லாம் இல்லை இது.

Unknown said...

nice..

Gokul Rajesh said...

memories :)

Gokul Rajesh said...

I am very impressed... Memories can grow like wine... Memories can't be relived... Sooooper chithi... (I had to take my friend's help though :))

Deepa said...

Exactly Gokul!
I am so glad you understood and expressed it most beautifully in English. Thank you dear. :)

Gayathri said...

நல்ல அருமையா எழுதிருக்கீங்க

பாற்கடல் சக்தி said...

நல்லதொரு வாசகனுபவம் தந்தமைக்கு நன்றி

eniasang said...

அந்த கடைசி வரி அருமை.