Thursday, January 14, 2010

சுயதரிசனம்

புதையல் வேட்டை நடந்தது;
ஆளாளுக்கு முனைந்து தேடியதில்
வைரங்கள் கிடைத்தது ஓரிருவருக்கே;
கண்ணாடிக் கற்களை அள்ளிப் புதையல் என்று
சிரித்து நின்றனர் சிலர்;
குடிக்கத் தண்ணீராவது கிடைக்கட்டும் என்று
கிணறு வெட்டக் கிளம்பினர் சிலர்;
தூர் மட்டும் வாரி அமைதியாய்ச் சென்றனர் சிலர்;
ஆழத் தோண்டி அகப்பட்ட கண்ணாடியில்
முகம் மட்டும் பார்த்த திருப்தியில் நான்.

13 comments:

அண்ணாமலையான் said...

அழகாருக்கு...

Dr.Rudhran said...

திருப்தியில் நான்.
good

பா.ராஜாராம் said...

//ஆழத் தோண்டி அகப்பட்ட கண்ணாடியில்
முகம் மட்டும் பார்த்த திருப்தியில் நான்.//

போதுமே..திருப்தியை விடவா புதையல்?

:-)

selventhiran said...

அட...! புத்தகக்கண்காட்சி - பதிவுகள் - பட்டியல்கள் - இவற்றோடு பக்காவாக சிங்க் ஆகிறது இக்கவிதை :))

Vidhoosh said...

:) நல்ல கவிதை. உங்கள் புது template கூட அழகா இருக்கு.

ஜூனியர் நலமா?

Deepa said...

நன்றி அண்ணாமலையான்!

நன்றி டாக்டர் ருத்ரன்!

நன்றி ராஜாராம்!

நன்றி செல்வேந்திரன்!
அய்யோ! போற போக்கில இப்படி ஏதாவது கொளுத்திப் போட்டுட்டுப் போகாதீங்க. அதெல்லாம் எதுவுமில்லை. :-)

நன்றி விதூஷ்!
நேஹா நலம். உங்க குட்டீஸ்?
டெம்ப்ளேட் நல்லாருக்கா? ஹையா!

அம்பிகா said...

\\பா.ராஜாராம் said...

போதுமே..திருப்தியை விடவா புதையல்?\\

:-)

T.V.ராதாகிருஷ்ணன் said...

:-)))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பா.ராஜாராம் said...
//ஆழத் தோண்டி அகப்பட்ட கண்ணாடியில்
முகம் மட்டும் பார்த்த திருப்தியில் நான்.//

போதுமே..திருப்தியை விடவா புதையல்?

:-)///

அதே தாங்க
:)

அமுதா said...

சுயதரிசனம் அருமை

சந்தனமுல்லை said...

ஆகா..கவிதாயினி...கலக்குங்க..நான் கூட ஆழக்குழி தோண்டி அண்ணாந்து பார்த்தா ன்னு விடுகதையோ நினைச்சுட்டேன்! :-)

அமிர்தவர்ஷினி அம்மா said...

செல்வேந்திரன் said...
அட...! புத்தகக்கண்காட்சி - பதிவுகள் - பட்டியல்கள் - இவற்றோடு பக்காவாக சிங்க் ஆகிறது இக்கவிதை :))




இந்தக்கவிதை படித்து முடித்தபின் எனக்குத் தோன்றியது இதே.:)))))

Radhakrishnan said...

அருமையாக இருந்தது.