Wednesday, December 31, 2008

அத்தாட்சி


"நான் என்னவோ வேண்டுமென்றே தொலைத்து விட்டதாகப் பழி போட்டாயே எல்லாம் இங்கே தான் இருக்கிறது. அறையைச் சுத்தம் செய்யும் போது கிடைத்தது; இந்தா." ஒரு கற்றை பழைய காகிதங்களை நீட்டினார் அவர். அதை வாங்கும் முன் அவரது மனைவியிடமருந்து பறித்துக் கொண்டாள் அங்கு வந்த அவரது மகள். "இதெல்லாம் என்ன? உங்கள் காதல் கடிதங்களா? நான் படித்து விட்டுத் தருகிறேன். வாங்கிக் கொண்டு ஓடும் மகளைச் சலனிமின்றி பார்க்கின்றனர் அந்தத் தம்பதியர். அது நாகரிகம் இல்லை என்று தடுக்க அவர்களுக்கு மனமில்லை. அவள் நினைவு தெரிந்து சண்டையும் மனக்கசப்புகளுமே பகிர்நது வந்த தாங்கள் கூட ஒரு காலத்தில் காதலித்து மகிழ்ந்து மற்ற பெற்றோரைப் போல் இருந்து இருக்கிறோம் என்று தங்கள் மகள் புரிந்து கொள்ள‌ இந்த நைந்து போன காகிதங்கள் உதவட்டுமே என்று நினைத்தார்கள் போலும்.

அவள் அக்கடிதங்களை வெகு நேரம் பிரிக்காமலே கையில் வைத்துப் பார்த்தபடி இருந்தாள். "எதுக்குத் தான் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க? எப்பப் பாரு சண்டை?" என்று தனது விமர்சனங்களுக்கு எப்போதும் ஆளாகும் பெற்றவர்கள் என்றாவது ஒரு காலத்தில் மனமொத்து இருந்திருப்பார்கள் என்று அறிந்து உணர்ந்து கொள்ளும் தீராத ஏக்கம் தீரப்போகிறது என்று நினைத்து வாங்கிக் கொண்டு வந்த போது இருந்த உற்சாகம் மொத்தமாக வடிந்து போய் இருந்தது. அதுவும் மறுப்பேதும் சொல்லாமல் அவர்கள் அவளிடம் தந்து விட்டது அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது. தான் என்றுமே பார்த்திராத யாரோ அந்நியரைச் சந்திக்கப் போகும் அனுபவமாகத் தோன்றியது அக்கடிதங்கள். நிமிட நேரத்தில் அவளுக்கு அக்கடிதஙளைப் படிக்கும் ஆர்வம் சுத்தமாக அற்றுப் போனது. தான் அவர்களைப் பற்றி ஒன்றுமே அறிந்திருக்கவில்லையோ என்று கூடத் தோன்றியது.அந்த‌ர‌ங்கம் புனித‌மான‌து என்ற‌ க‌தை ஞாப‌க‌ம் வ‌ந்த‌து.
"அம்மா! சாரிம்மா. நான் எதையும் ப‌டிக்க‌ல‌. இந்தா ப‌த்திர‌மா வெச்சுக்கோ. ஆனா என்னிக்காவ‌து தூக்கிப் போடணும்னு தோணினா என் கிட்டே குடு. உங்க‌ளுக்கு இது எப்படியோ என‌க்கு இது ரொம்ப‌ முக்கிய‌ம். என்னைப் பெற்றவ‌ர்க‌ள் ஒருவ‌ரை ஒருவ‌ர் காத‌லித்து இருக்கிற‌ர்கள் என்ப‌து என‌க்கு ரொம்ப‌ முக்கிய‌மான‌ விஷ‌ய‌ம்." சொல்லிவிட்டு ந‌க‌ரும் ம‌க‌ளைக் க‌ண்ணில் நீரோடு பார்த்துக் கொண்டிருந்தாள் அந்த‌த் தாய்.

Friday, December 19, 2008

ஒரு கால் சென்டரில் ஓரிரவு

One Night @ the Call Center
இந்த‌ப் புத்த‌க‌த்தைப் ப‌ற்றி வெகு நாட்க‌ளாக‌ அறிந்திருந்தாலும் 2 நாட்க‌ளுக்கு முன்பு தான் ப‌டிக்க‌ முடிந்த‌து.
இந்தியா முழுவதும் ப‌ல்வேறு சிறு ந‌க‌ர‌ங்க‌ளில் 18 முத‌ல் 30 வ‌ய‌து வ‌ரை சுமார் 300,000 இளைஞ‌ர்க‌ள் கால்சென்டர் துறையில் ப‌ணிபுரிகிறார்க‌ள்.அமெரிக்க நுகர்வோருக்கு வாஷின் மெஷினைப் பழுது பார்க்கவும் மைக்ரோவேவ் அவ‌னை உப‌யோகிக்க‌வும் தொலைபேசியில் பொறுமையாக‌ச் சொல்லித்த‌ர‌ வேண்டியது அவ்ர்க‌ள‌து வேலை. அவ‌ர்க‌ளுக்கு இவ‌ர்க‌ள் இந்திய‌ர்க‌ள் என்ப‌து எக்கார‌ண‌ம் கொண்டும் தெரிந்து விட‌க் கூடாது. அமெரிக்க‌ப் பெய‌ர்க‌ள் வைத்துக் கோண்டு அமெரிக்க‌ ஆங்கில‌ம் பேசுவ‌தோடு ம‌ட்டும‌ல்லாம‌ல், அன்னாட்டு ம‌க்க‌ளின் சின்னச் சின்னப் ப‌ண்டிகைக‌ள், லோக்க‌ல் செய்திக‌ள் ஆகிய‌வ‌ற்றிலும் அத்துப்ப‌டியாக‌ இருக்க‌ வேண்டும்.
அப்ப‌டி ஒரு கால்சென்ட‌ரில் இரவு நேர ஷிப்டில் ப‌ணிபுரியும் ஆறு ந‌ண்ப‌ர்கள், (மூன்று ஆண்க‌ளும் மூன்று பெண்க‌ளும்)அவ‌ர்க்ள‌து வாழ்வின் அவலங்கள்,அவ‌ர்க‌ள‌து கோளாறான‌ வாழ்க்கை முறை,அவர்கள் சந்திக்கும் அவமானங்கள், இவற்றில் இலகுவாகப் பயணிக்கிறது கதை. ஒரு நாள் இரவு அவர்களுக்கு வினோத‌மான் தொலைபேசி அழைப்பு வ‌ருகிற‌து. க‌ட‌வுளிட‌மிருந்து! அது அவ‌ர்களின் சிந்தனைகளிலும் செயல்களிலும் என்னவிதமான மாற்றத்தைக் கொண்டு வருகிறது என்பதைச் சுவாரசியமாகச் சொல்லி இருக்கிறார் இப்புத்தகத்தை எழுதிய சேத்தன் பகத்.
சின்ன நெருடல். கதை மாந்தரை வட மாநிலங்களின் க்ள்ப் கலாசாரங்களைப் பொதுவாக நம் நாட்டு இளைஞர்களின் கலாசாரமாகப் பொதுநிலைப் படுத்தியுள்ளதை ஏற்க முடியவில்லை. அதுவும் அவர்களின் கால்சென்டர் கலாசாரத்தின் மூலம் ஏற்பட்ட பாதிப்பு என்பதை ஆசிரியர் அழுத்தமாக முன்வைக்க வில்லை. இது போல் சில இடங்களில் பாத்திரங்கள் கொஞ்சம் அந்நியப்பட்டுப் பொகிறார்கள். மற்றபடி முற்போக்கு இல‌க்கிய‌ங்க‌ள் விரும்பும் வாச‌க‌ர்க‌ள் ப‌டிக்க‌ வேண்டிய‌ நூல்.
த‌மிழில் மொழிபெய‌ர்க்க‌த் த‌குந்த‌தா என்று ப‌டித்துவிட்டு (அல்ல‌து ஏற்க‌ன‌வே ப‌டித்த‌வ‌ர்க‌ள்) யாராவ‌து சொல்லுங்க‌ள்.

Friday, November 28, 2008

எந்திர‌ன்!

சென்னையில் அன்றாடம் வேலைக்கு, கல்லூரிகளுக்கு வெகு தொலைவு பயணிக்க வேண்டி இருக்கும் நடுத்தர வர்க்கத்தினருக்கு இந்த ஷேர் ஆட்டோ ஒரு வரம் என்றே சொல்லலாம்.

ஷேர் ஆட்டோ என்றால் என்னவென்று தெரியாத சிலருக்காக ஒரு சின்ன அறிமுகம். சாதாரண ஆட்டோவை விட ஒன்றரை மடங்கு பெரிதாக இருக்கும். ஆனால் முன்று நான்கு மடங்கு அதிக நபர்களை ஏற்றிச்செல்லும் வ‌ல்ல‌மை ப‌டைத்த‌து. ஒரு மினி வேன் போல் பின்னால் இரு வரிசைகள் எதிரில் ஒரு சின்ன வரிசை இருக்கும். சிலவற்றில் பின்னால் மட்டும் நான்கு பேர் அமரும் படி மினி ஷேர் ஆட்டோ வாக இருக்கும்.
சாதா ஆட்டோவில் 50 ரூபாய் ஆகும் இட‌த்துக்கு இதில் 5 ரூபாய் கொடுத்தால் போதும். பேருந்து நிறுத்த‌ங்க‌ளில் காலை ம‌ற்றும் மாலை அவ‌ச‌ர‌ நேர‌ங்க‌ளில் கிடைக்கும் ஷேர் ஆட்டோக்க‌ளில் (குறிப்பிட்ட‌ இட‌த்துக்குச் செல்லும்) ஏறி அவ‌ர‌வ‌ர் வேண்டிய‌ இட‌ங்க‌ளில் இற‌ங்கிக் கொள்‌ள‌லாம்.

மாநகரின் எழுதாத விதிப்படி இதிலும் இவ்வ‌ள‌வு பேரைத் தான் ஏற்ற‌லாம் என்ற‌ வ‌ரை முறை இல்லை. எப்போதும் டிரைவ‌ருக்கு இருபுற‌மும் இருவ‌ர், பின்பு சீட்க‌ளில் நெருக்கிய‌டித்து எவ்வ‌ள‌வு பேர் முடியுமோ அவ்வ‌ள‌வு. சில ஆட்டோக்களில் கட்டணம் வசூலிக்க ஒரு சிறுவன் (ஆம் குழந்தைத் தொழிலாளி தான்) இருப்பான்.

அன்று மாலை வழக்கம் போல் நானும் ச‌க‌ ப‌ய‌ணி ஒருவ‌ரும் பேர்ந்து நிறுத்தத்தில் நின்றிருந்தோம். வெகு நேர‌ம் க‌ழித்து வ‌ந்த‌து ஒரு ஷேர் ஆட்டோ. அதிலிருந்து சிலர் இறங்கவும் நாங்கள் அடித்துப் பிடித்து ஏறினோம். ம‌ழை வேறு வ‌ரும் போலிருந்தது. ஆட்டோ புற‌ப்ப‌ட்ட‌ பின்பு தான் பார்க்கிறேன் ‍ பதின்மூன்று ப‌திநான்கு வ‌ய‌திருக்கும் அவ‌னுக்கு, ஆட்டோவின் வாசலைப் பிடித்து நின்றபடி வ‌ருகிறான். நன்றாகக் கவனியுங்கள் இது ப‌ஸ் இல்லை. மேலேயோ ப‌க்க‌வாட்டிலோ பிடித்துக் கொள்ள‌‌ க‌ம்பிக‌ள் இல்லை. நான் அதிர்ந்தே போனேன். ஏனென்றால் அவ‌ன் எழுந்து கொண்ட இட‌த்தில் தான் நான் அம‌ர்ந்திருந்தேன். அவ‌ன் இற‌ங்க‌வில்லை. க‌ட்ட‌ண‌ம் வ‌சூலிப்ப‌வ‌ன் என்று புரிந்த‌‌து.

பின்னால் அம‌ர்ந்திருந்த பெண்ம‌ணிக‌ளில் சில‌ர் "ம‌டியில் தான் உக்கார்த்தி வெச்சுக்க‌ணும் இவ‌னை.." என்று கிண்ட‌ல‌டித்த‌ப‌டி இருந்தார்க‌ள். என‌க்கு என்ன‌ செய்வ‌தென்றே தெரிய‌வில்லை. கொஞ்ச‌ம் ந‌க‌ர்ந்து அவ‌னை உட்காரும்ப‌டி சொன்னேன் (கீழே தான். சிட்டில் என‌க்கே இட‌மில்லை) அவ‌ன் ம‌றுத்து விட்டா‌ன். அவன் விழுந்துவிடக் கூடாதே என்று அனைவருமே தவிப்புடன் இருந்தோம். என் அருகில் இருந்த பெண் மட்டும் என் காதில் குனிந்து, "ஏய் க‌வ‌லைப்ப‌டாதே. இதெல்லாம் இவ‌ர்க‌ளுக்கு ஸ்டைல்! ப‌ஸ்ஸில் பார்த்த‌தில்லை? இட‌மிருந்தால் கூட‌ உட்காராம‌ல் ஸ்ட‌ன்ட் காண்பிப்பார்க‌ள்." ஏனோ என‌க்கு முணுக்கென்று கோப‌ம் வ‌ந்த‌து. "அது வேறு இது வேறு" என்று ம‌ட்டும் சொல்லிப் பேசாம‌ல் இருந்து விட்டேன்.

என் சிந்த‌னையை அவ‌ன் குர‌ல் த்டை செய்த‌து. இட‌ம் த‌ர‌ச் சொல்லிக் கேட்கிறானோ என்று நினைத்து "என்ன‌ப்பா?" என்றேன் நெகிழ்ந்து. ஒரு அல‌ட்சிய‌ப் புன்ன‌கையைச் சித‌ற‌விட்ட‌ப‌டி "உம்? காசெடுங்க‌" என்று அத‌ட்டினானே பார்க்க‌வேண்டும்! அப்போது தான் புரிந்த‌து; தான் விழுந்து விடுவோமோ என்பதை விட‌க் காசு த‌ராம‌ல் யாரும் இற‌ங்கி விட‌க் கூடாது என்ப‌திலேயே அவ‌னுக்கு அதிக‌ க‌வ‌ன்ம் இருந்திருக்கிற‌து.

Saturday, November 8, 2008

கற்றது சிவில்!

"க‌ற்ற‌து த‌மிழ்" ப‌ட‌ம் பார்த்தேன். ப‌ர‌ப‌ர‌ப்புக்காகப் ப‌ல‌ மிகைப்ப‌டுத்த‌ப் பட்ட காட்சிக்ளும் அதிர்ச்சி தரும் சைக்கோத்தனங்களும் இருந்தாலும் சொல்ல வந்த மையக் கருத்து என் இய‌ல்பு நிலையை வெகுவாக‌த் தொந்த‌ர‌வு செய்த்து. குறிப்பாக‌ ஐ.டி தொழிலை ந‌ம்பித் தான் நாங்க‌ளும் ஜீவ‌ன‌ம் ந‌ட‌த்துகிறோம் என்ப‌தால். த‌மிழில் தொட‌ங்கி வ‌ர‌லாறு, புவியிய‌ல், அறிவிய‌ல், தத்துவ‌ம் என்று எந்த‌ப் ப‌டிப்பினைப் ப‌டித்த‌வ‌னுக்கும் ந‌ம் நாட்டில் வேலை வாய்ப்பில்லை, ஆனால் "பொட்டி" த‌ட்டும் ப‌டிப்பினைக் கற்ற‌‌வ‌ர்க‌ளுக்கு ம‌ட்டும் வ‌ச‌தி மிகுந்த‌ வாய்ப்புக்க‌ள் கொட்டிக் கிட‌ப்ப‌தாக‌ நாய‌க‌ன் குமுறுவ‌து உண்மையில் சிந்திக்க‌ வேண்டிய‌ ஒன்று.

ஒரு ச‌ந்த‌தியே அயல்நாடுகளுக்கு கூலி வேலை செய்து பிழைக்கும் வ‌ண்ண‌ம் இருக்கிற‌து.

தேசிய‌ பொருளாதார‌ம், உல‌க‌ம‌ய‌மாக்க‌ல் இவை ப‌ற்றி எல்லாம் பேச‌ என‌க்கு அதிக‌ அறிவும் தெளிவும் போதாது. ஆகையால் அதை விட்டு விடுகிறேன்.
என் சொந்த‌ அனுப்வத்தை விவ‌ரிக்க‌ட்டுமா?

நான் 1999 ஆம் ஆண்டு சிவில் எஞ்சினிய‌ரிங் ப‌ட்ட‌ப் ப‌டிப்பை முடித்தேன். அப்போதே என்னுட‌ன் ப‌டித்த‌ ப‌ல‌ர் க‌ணிப்பொறி ப‌டிப்பையும் கையோடு முடித்து வேலை பெற்றிருந்தார்க‌ள். நானும் சில‌ரும் ப‌டித்த‌ க‌ட்ட‌ட‌ப் பொறியிய‌ல் துறையிலேயே வ‌ல்லுன‌ர்க‌ளாக‌ வேண்டும் என்று விரும்பி அந்த‌ப் ப‌க்க‌மே போக‌வில்லை. சிற‌ந்த‌ ம‌திப்பெண்க‌ள் பெற்று வெகு விரைவில் பெரிய‌ பெரிய‌ க‌ட்ட‌ட‌ங்க‌ளும் அணைக்க‌ட்டுக்க‌ளும் க‌ட்ட‌ப் போகும் க‌ன‌வுக‌ளுட‌ன் க‌ல்லூரி விட்டு வ‌ந்த‌ என‌க்கு எங்கு சென்றாலும் ஏமாற்ற‌ங்க‌ள் தான் மிஞ்சின‌.

முத‌ல் கார‌ண‌ம், ஆண்க‌ள் ஆதிக்க‌ம் செலுத்தும் க‌ட்ட‌ட‌த் தொழிலில் பெண்களை வேலையில் எடுக்க‌த் த‌ய‌ங்கின‌ர். மேலும் உண்மையிலேயே வேலை வாய்ப்புகளும் மிக‌வும் குறைவாக‌ இருந்த‌ன. சரி, விரிவுரையாளர் வேலைக்கு முயன்றால் புதிதாகத் தொடங்கப்பட்ட க‌ல்லூரிக‌ளில் க‌ட்ட‌ட‌ப் பொறியிய‌ல் பாட‌மே இல்லை. பொறியிய‌ல் ப‌ட்ட‌தாரி என்ப‌தை ம‌ற‌ன்து விட்டு "ஏதோ ஒரு வேலை" என்று நாளித‌ழில் தென்ப‌ட்ட‌ விள‌ம்ப‌ர‌ங்க‌ளைத் தொட‌ர்ந்து எங்கெங்கொ வேலை தேடி அலை‌‌ந்தேன். எதுவும் ப‌ய‌ன‌ளிக்க‌ வில்லை.

இத‌னிடையில் த‌ர‌ம‌ணி த‌ர்மாம்பாள் பெண்க‌ள் தொழில்நுட்ப‌ப் ப‌ட்ட‌ய‌ப் ப‌டிப்புச் சாலையில் ஆறு மாத‌ங்க‌ள் ப‌ணி புரிந்தேன். க‌ல்வி க‌ற்பிக்கும் அந்த‌ப்ப‌ணி ம‌ன‌துக்குத் திருப்தியாக‌ இருந்த‌ போதும் ச‌ம்ப‌ள‌மே இல்லாம‌ல் எவ்வ‌ள‌வு நாள் ப‌ணியாற்றுவ‌து?
ஆம், அங்கு நிர‌ந்த‌ர‌ விரிவுரையாள‌ர்க‌ளுக்கு ம‌ட்டுமே ஒழுங்காக‌க் கைநிறைய‌ச் ச‌ம்ப‌ள‌ம் வ‌ரும். என்னைப் போல் கான்ட்ராக்ட்டில் ப‌ணிபுரிப‌வ‌ர்க‌ள் எங்க‌ள் வேலை நேர‌ங்க‌ளைக் குறிப்பெடுத்து மேல‌திகாரிக‌ளிட‌ம் கையொப்ப‌ம் பெற்று அலுவ‌ல‌க‌த்தில் ஒப்ப‌டைத்து‌ 15 நாட்க‌ளுக்குப் பின்பு ச‌ம்ப‌ள‌ம் வ‌ரும். ஆனால் என்ன‌ நேர‌மோ நான் வேலைக்குச் சேர்ந்து முத‌ல் மாத‌ம் ம‌ட்டுமே ஒழுங்க‌க‌ ச‌ம்ப‌ள‌ம் வ‌ந்த‌து. பின்ன‌ர் "அர‌சிடமிருந்து நிதி வ‌ராத‌" கார‌ண‌த்தால் 5 மாத‌ங்க‌ளுக்கு ச‌ம்ப‌ள‌மே வ‌ர‌வில்லை. மேலும் ஒன்றரை மணி நேரம் நகரப் பேருந்தில் நசுங்கிக் கொண்டு போய் வர வேண்டி இருந்தது. வெறுத்துப் போய் அந்த வேலையை விட்டேன்.(அந்தப் பணம் இன்னொரு ஆறு மாத‌ங்க‌ள் க‌ழித்து மொத்த‌மாக‌க் கிடைத்தது என்ன‌வோ உண்மை)

அப்போது தான் இந்த‌ இன்ட‌ர்னெட் புர‌ட்சி சூடு பிடிக‌த் தொட‌ங்கி இருந்த‌ நேர‌ம் நான் வெட்டியாக‌த் தானே இருந்தேன். வேலை தேட‌, சும்மா வேலையில் இருந்த‌ என் ந‌ண்ப‌ர்க‌ளுட‌ன் "ச‌ட்" செய்ய‌ என்று பிரௌசிங் சென்ட‌ருக்குச் செல்வ‌து என் வ‌ழ‌க்க‌மாகி இருந்த‌து. அப்ப‌டி நான் வ‌ழ‌க்க‌மாக‌ச் செல்லும் இட‌த்தின் முத‌லாளி என் ந‌ண்ப‌ராகி இருந்தார். அவ‌ர் தான் என‌க்கு ஒரு நாள் சொன்னார். "நீ ஏம்மா சிவில் துறையையே பிடிச்சுக் கிட்டு இருக்கே. க‌ம்ப்யுட்ட‌ர் ப‌டிப்பு ஏதாவ‌து ப‌டி. ந‌ல்லா வ‌ருவே." என்றார். ஏற்க‌ன‌வே என் மீது அகறை உள பல பேர் சொல்லி இருந்தாலும் அன்று ஒரு வேக‌ம் வ‌ந்த‌து. சைக்கிளை எடுத்து நேரே விட்டேன், அருகில் இருந்த‌ க‌ம்ப்யூட்ட‌ர் ட்ரெய்னிங் சென்ட‌ருக்கு!

அங்கேயே ப‌டித்து, பின்பு அங்கேயே ஒரு வேலையும் பெற்று, பின்பு ப‌டிப்ப‌டியாக‌ முன்னேறி இப்போது ஓர‌ள‌வு வாழ்வில் காலூன்றி நிற்க‌ முடிந்த‌து என்றால் அது நான் பாதை மாறி வ‌ந்த‌தால் தான்.
ஆனால், இப்போது ஒரு க‌ட்ட‌ட‌ப் ப்ளானைப் பார்த்தால் என்ன‌ ஏது என்று ஒன்றும் புரிய‌வில்லை. சுத்த‌மாக‌ எல்லாம் ம‌ற‌ந்து விட்ட‌து!

Thursday, October 23, 2008

நேஹாவுக்கு...!

சின்னஞ்சிறிய உனது கைகள் தூக்கி காற்றில் அளாவுகிறாய். தண்டை சப்தமிடும் உனது பிஞ்சுக்கால்களைத் தரையை உதைத்து உதைத்து எழுப்புகிறாய்.
விண்ணைத்தொடும் கனவுகள் காண இப்போதிலிருந்தே தொடங்கி விட்டாயா? கனவு காண்; அஞ்சாதே! யார் சொல்லியும், எதற்காகவும் உன் கனவுகளை விட்டுக் கொடுக்காதே!
ஆனால் கொஞ்சம் நிதானி மகளே! ஏனென்றால் உன் கனவுகள் உனக்கு மட்டுமே சொந்தமானவை. ஆம்! இப்படி சொல்வதற்காக கோபப்படாதே. அவ்வாறு நம்பினால் மட்டுமே உன் கனவுகளை நிறைவேற்றும் உறுதியும் துணிவும் நீ அடைய முடியும்.
உன் க‌ன‌வுக‌ள் ம‌க‌த்தான‌தாக‌ இருக்க‌ வேண்டும் என்ப‌து ம‌ட்டுமே உன்னைப் ப‌ற்றி நான் காணும் க‌ன‌வு! வாழ்த்துக்க‌ள் க‌ண்ணே.

Wednesday, October 22, 2008

சினிமா ரசிகரா நீங்கள்? மதுமிதாவின் அதிரடிக் கேள்விக் கணைக்குப் பதில் அளித்து மகிழுங்கள்! http://madhumithaa.blogspot.com/2008/10/blog-post_21.html

நான் ஆடிய ஆட்டம் இதோ!

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்?
2 அல்லது 3 வயதிருக்கலாம். எனக்கும் டிக்கெட் எடுத்து அழைத்துச் செல்வார்கள் வீட்டில். தண்டம்! படம் தொடங்கியதும் தூங்க ஆரம்பித்து விடுவேன்.


1. அ. நினைவு தெரிந்து கண்ட முதல் சினிமா?
தூங்காமல் ரசித்த முதல் படம் ச‌ரியாக நினைவில்லை. ஞாயிறு மாலை தூர்தர்ஷனில் ஒளிபரப்பப்படும் பல பழைய பட்ங்கள் வீட்டில் அனைவருடனும் அமர்ந்து ரசித்ததுண்டு. (குறிப்பாக அக்காவுடன்!)


2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா? கல்லூரி. என் மகள் 8வ‌து மாதம் வயிற்றில் இருந்தபோது ஜோவுடன் (என் கணவர்) பார்த்தது. நல்ல‌ படம். விமர்சனம் என் ஆங்கிலப் பக்கத்தில்: http://deepajoe.blogspot.com/2008/01/i-am-great-fan-of-balaji-sakthivel-ever.html


3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்? வெள்ளித்திரை. அக்கா வீட்டில். நல்ல கதை. பண்பட்ட கருத்துக்கள். அருமையான நடிப்பு (பிரகாஷ் ராஜ்)


4. மிகவும் தாக்கிய தமிழ் சினிமா? - காதல், வீடு


5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ் சினிமா-அரசியல் சம்பவம்? சினிமா கதாநாயகர்களை நிஜ நாயகர்களாக அப்பாவி மக்கள் நம்பி ஏமாறுவது.

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ் சினிமா - தொழில்நுட்ப சம்பவம்?தொழில்நுட்பம் பற்றியெல்லாம் ரொம்ப அக்கறை இல்லை. காதலன் படத்தில் முக்காலா பாட்டு பார்த்து அதிசயித்திருக்கிறேன்.



6. தமி்ழ் சினிமா பற்றி வாசிப்பதுண்டா? ஹும்! எந்தப் பத்திரிகையை எடுத்தாலும் சினிமா செய்திகள் தானே. வாசிப்பதுண்டு!


7. தமிழ் சினிமா இசை?நல்ல இசை ரசிகர்களுக்கு முன்பு விருந்தாக இருந்தது. இப்போது மருந்து போல் அரிதாகிக்கொண்டு வருகிறது. ஆனாலும் நம்பிக்கை தருகிற இசை அமைப்பளர்களும் கவிஞர்களும் இன்னும் உண்டு.
பிடித்த பாடல்கள் பற்றி நானும் த்னியே எழுதுகிறேன்!

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

ஹிந்தி:

காமோஷி -‍ காது கேளாத பெற்றோருக்கு மகளகப் பிறந்து பெரிய பாடகியாகும் பெண்ணின் கதை. மனிஷா கொய்ராலா, நானா படேகர்.

ஹம் ஆப்கே ஹை கோன் ‍- பாட்டுக்கும் கூத்துக்கும் மட்டுமே ரசிக்கலாம்!

அப்புறம், வெகு சமீப காலமாகத் தான் ஆங்கிலப் பட‌ங்கள் பார்க்கிறேன். அதுவும் பெரும்பாலும் ஹாலிவுட் படங்கள்.அதில் பிடித்தவை:

Titanic - எதுவும் சொல்லத் தேவையே இல்லை!

Father of the Bride - ஒரு தந்தை தன் மகளுக்குத் திருமணம் செய்து வைக்கும் போது ஏற்படும் அனுபவங்கள்.

Three men and a Baby - மூன்று திருமணமாகாத ஆண்களிடம் ஒரு கைக்குழந்தை வந்து சேர்கிறது.

Life is beautiful - இது ஒரு இத்தாலியப் படம். ஒரு யூத இளைஞன் தன் புத்தி சாதுரியத்தலும் நகைச்சுவைத்திறனாலும் ஒரு இத்தலியப் பெண்ணைக் காதலித்து மணக்கிறான். அதே குணாம்சங்களினால் தன் மகனை ஜெர்மன் நாஜி முகமிலிருந்து காப்பாற்றும் கதை. இந்தப்படத்தைப் பல தடவை பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் கண் கலங்கி விடுவேன்.

Color of Paradise - http://mathavaraj.blogspot.com/2008/09/blog.html

7. தமிழ் சினிமா இசை? நல்ல இசை ரசிகர்களுக்கு முன்பு விருந்தாக இருந்தது. இப்போது மருந்து போல் அரிதாகிக்கொண்டு வருகிறது. ஆனாலும் நம்பிக்கை தருகிற இசை அமைப்பளர்களும் கவிஞர்களும் இன்னும் உண்டு.

9. தமிழ் சினிமா உலகுடன் நேரடித் தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச் சினிமா மேம்பட அது உதவுமா?

இல்லை.

10. தமிழ் சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
வெகு சில பட்ங்கள் நம்பிக்கை தருவனவாக இருக்கின்றன. ஒரு பக்கம் எப்போது இல்லாத அளவு நல்ல படங்கள் வெற்றி பெறுகின்றன. அதே அளவு வியாபாரத்துக்காக மட்டுமே எடுக்கப்படும் குப்பைகளும் பெருமளவில் வெற்றி பெறுகின்றன.
ஆனால் பொதுவாகப் பெண்களின் நிலை படுமோசமாக உள்ளது. தேசிய விருது பெற்ற ஒரு நடிகை அப்படி ஒரு சிறந்த பாத்திரத்தில் நடித்ததற்காக வருந்தும் நிலையில் இருக்கிறார். பெரிய நடிகர்கள் குத்தாட்டம் போட அழைப்பதில்லை என்பதே அவரின் மிகப் பெரிய சோகம். அவரைச் சொல்லிக் குற்றமில்லை. அப்படித்தான் இருக்கிறது தமிழ்ச் சினிமா உலகம்.
ஆகவே பட்ங்களின் தரம் உயர்ந்தாலும் சினிமா உலகில் (எந்தத் துறையையும் போல்) பெண்களின் நிலை சரியாக (உயர்வது அடுத்த படி!) இன்னும் பல காலம் பிடிக்கும். நம்புவோம்!

Tuesday, October 21, 2008

பதில்களை விடவும் கேள்விகள் முக்கியமானவை


எழுத்தாளர் திரு மாதவராஜ் அவர்களின் கேள்விகளுக்கு எனது பதில்கள்:

1. நீங்கள் படிக்க நேர்ந்த முதல் நாவல் எது ? ஏதோ ஒரு பாக்கெட் நாவ‌ல். ராஜேஷ் குமாரோ ராஜேந்திர‌ குமாரோ நினைவில்லை.


2. எந்த வயதிலிருந்து நாவல்கள் படிக்க ஆரம்பித்தீர்கள்?
8 அல்ல‌து 9 வ‌ய‌தில்.

3. எந்த வகையான நாவல்கள் உங்களுக்குப் பிடிக்கிறது?
அ. சமூக நாவல்கள்
இ. ஹரிபாட்டர் _ இதற்கு ம‌ட்டும் நான் தீவிர‌ ர‌சிகை. இவ்வ‌கையான‌ எல்லா நாவ‌ல்க‌ளும் அல்ல‌.


4. ஒரு நாவலை எப்படி படிக்க தேர்ந்தெடுக்கிறீர்கள்?
அ. ஏற்கனவே அந்த நாவலைப் படிக்க நேர்ந்தவர்கள் சொல்லக் கேட்டு
இ. நாவலாசிரியரின் பேரைப் பார்த்து
ஈ. நாவலின் முன்னுரையைப் படித்துப் பார்த்து


5. நாவல்களுக்கும், சிறுகதைகளுக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்று நினைக்கிறீர்கள்?
ஆ. சொல்லப்படும்ம் கதையின் கால எல்லை

6. நாவல்களைப் படிக்கிற போக்கில் குறிப்பிட்ட கதாபாத்திரங்கள் கதையின் மையப் பாத்திரமாக எப்படி உருவெடுக்கிறது?
ஆ.எழுத்தாளரின் முன்வைப்பிலிருந்து

7. ஒரு நாவலுக்கு, குறிப்பாக எத்தனை பக்கங்கள் இருக்கலாம் என்று கருதுகிறீர்கள்?
200 முத‌ல் 300


8. மிக அதிகமான பக்கங்கள் உள்ள நாவல்களைப் பார்த்ததும் என்ன தோன்றுகிறது?
அவ்வளவு அதிக‌ நேர‌ம் ஒதுக்கிப் ப‌டிக்கும் அள‌வுக்குத் த‌குதி வாய்ந்த்தா என்று யோசிப்பேன்! ஆம் எனில் விட்டு விட்டாவ‌து ப‌டித்து முடிப்பேன்.


9. நாவலின் சில அத்தியாயங்களைப் படித்ததுமே, இறுதிப்பக்கங்களுக்குச் செல்லும் வழக்கமுண்டா?
இல்லை. வேறு வ‌ழி இல்லாம‌ல் பொழுதைக்க‌ழிக்க‌ பாக்கெட் நாவ‌ல்க‌ள் ப‌டித்த‌ சில‌ ச‌ம‌ய‌ங்க‌ளில் ம‌ட்டும்.


10. எந்த சமயங்களை நாவல்கள் படிக்கத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறீர்கள்?
வீட்டில் ம‌ற்ற‌ வேலைக‌ளெல்லாம் ஓய்ந்த‌ பின்பு.


11. பாதி வரைப் படித்து, முடிக்காமல் போன நாவல்கள் எவை? ப‌ல‌ இருக்கின்ற‌ன. குல்சாரி, புத்துயிர்ப்பு, சிவகாமியின் சபதம், இன்னும் பல.


12. பெரும் எதிர்பார்ப்புடன் படித்து, பிடிக்காமல் போன நாவல்கள் எவை?
பாட்டிமார்க‌ளும் பேத்திமார்க‌ளும் _ ஜெய‌காந்த‌ன்ஒரு ம‌னித‌ன், ஒரு வீடு, ஒரு உல‌கம் _ ஜெய‌காந்த‌ன்பெர்சுவேஷ‌ன் _ ஜேன் ஆஸ்டென்


13. தாங்கள் படிக்க நினைத்து இதுவரை படிக்காமலே இருக்கிற நாவல்கள் எவை? போரும் அமைதியும் _ டால்ஸ்டாய் மோக‌முள் _ ஜான‌கிராம‌ன்

14. படித்ததில் பிடித்த பத்து தமிழ் நாவல்கள் எவை?
சில‌ நேர‌ங்க‌ளில் சில‌ ம‌னித‌ர்க‌ள், யாருக்காக அழுத்தான், எனக்காக அழு (குறுநாவல்கள்) _ ஜெய‌காந்த‌ன், காளான், siva‌ச‌ங்க‌ரி

முற்றுகை _ மேலாண்மை பொன்னுச்சாமி

15. படித்ததில் பிடித்த பத்து பிற இந்திய மொழி நாவல்கள் எவை?
காட் ஆஃப் ச்மால் திங்ஸ் _ அருந்ததி ராய்.


16. படித்ததில் பிடித்த பத்து வெளிநாட்டு நாவல்கள எவை?
Little Women, Da Vinci Code, ஜ‌மீலா, நம‌து இதய‌ங்கள், அன்னை வ‌ய‌ல், Uncle Tom's Cabin, Pride and Prejudice, Harry Potter (parts 1-6 ), Agatha Christie's many novels, Crime and Punishment

17. திரும்பத் திரும்ப படித்த நாவல்கள் எவை?

Little Women, Jamila, நம‌து இதய‌ங்கள்


18. படிக்கும் முன்னரோ, படித்த பின்னரோ நாவலின் தலைப்புகள் குறித்து யோசிப்பது உண்டா?
ஆம்
19. நாவல்களில் வந்த கதாபாத்திரங்களை தங்கள் லட்சிய மனிதர்களாக வரித்துக் கொண்டதுண்டா? அப்படி இருந்தால் குறிப்பிடுங்களேன்.

இல்லை


20. பிற மொழி நாவல்களுக்கும் தமிழ்மொழி நாவல்களுக்கும் என்ன வித்தியாசங்களை உணர்கிறீர்கள்?
கலாசாரம்


21. உலகின் பிறமொழிகளுக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும் என கருதிய தமிழ் நாவல்கள் எவை?
-
22. வாசித்ததில் தங்களது இயல்பு நிலையை வெகுவாக தொந்தரவு செய்த நாவல்கள் எவை?
ந‌ம‌து இத‌ய‌ங்க‌ள்

23. கதாபாத்திரங்களின் உரையாடல் எப்படி இருக்க வேண்டும்?
அ.எழுத்து மொழி ஆ.பேச்சு வழக்கு இ.வட்டார வழக்கு - நாவலின் தன்மையைப் பொறுத்து எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.


24. தாங்கள் இதுவரையில் வாசித்த நாவல்களில் பிடிபடும் பொதுத்தன்மைகள் எவை எவை? பெண்களின் மனதின் நுட்பமான உணர்வுகள், மனித நேயம்

25. எந்த நாவல்களைப் படித்ததும், அவற்றை எழுதிய எழுத்தாளரை சந்திக்க வேண்டும் என்று தோன்றியது? அப்படிஎதுவும் இல்லை.

26. தாங்கள் நாவல்களை தொடர்ந்து ஒரே மூச்சில் படிப்பீர்களா? அல்லது விட்டு விட்டு பல்வேறு சமயங்களில் படிப்பீர்களா? சூழ்நிலைய‌யும் நாவ‌லின் சுவார‌சிய‌த்தையும் பொறுத்த‌து.

27. உள்ளடக்கத்திற்காக மட்டுமின்றி மொழிநடைக்காகவே லயித்துப் படிப்பது யார் யாருடைய நாவல்களை? ஜெயகாந்த‌ன், ஹாரிபாட்ட‌ர் நாவ‌ல்க‌ள் (ஜே.கே. ரௌலிங்)

28. கதாபாத்திரங்களின் இயல்பு மீறி, நாவலாசிரியரே வலிந்து பேசுவது போல தோன்றியிருக்கிறதா. அப்படியானால், அந்த நாவல்கள் பற்றி உங்கள் அபிப்ராயம் என்னவாகிறது? அப்ப‌டி எதுவும் தோன்றிய‌தில்லை

29. நாயகத் தன்மையற்ற நாவல்களைப் படித்திருக்கிறீர்களா? குறிப்பிடுங்களேன்.
இல்லை


30. கவிதை, சிறுகதைகளைத் தாண்டி, நாவல்கள்தான் இலக்கியத்தின் உச்சம் என்று கருதுகிறீர்களா? இல்லை. சிறுக‌தைக‌ள் தாம் என்னை அதிக‌ம் பாதித்திருக்கின்ற‌ன‌.

31. தாங்கள் கடைசியாக படித்த தமிழ்நாவல் எது? :-) வெகு நாட்க‌ள் ஆகின்ற‌ன‌... ப‌டிக்க‌ வேண்டும்!

32. நாமும் ஒரு நாவல் எழுதவேண்டும் என்று உங்களுக்குத் தோன்றுவதுண்டா?
உண்டு.

33. நாவல்கள் எழுதத் தோன்றினாலும் ஏன் இதுநாள் வரையிலும் எழுதவில்லை? அந்த‌த் த‌குதியை முத‌லில் வ‌ள‌ர்த்துக் கொள்ள‌ வேண்டும். ந‌ல்ல‌ க‌ருப்பொருள் கிடைக்க‌ வேண்டும்.

சரி. படித்து விட்டீர்களா? முடிந்தால் நேர்மையாக பதில் சொல்லுங்கள். அல்லது நேர்மையாக மௌனமயிருங்கள். ஆனாலும் ஒன்றை நீங்கள் கண்டிப்பாக செய்தாக வேண்டும். முடிந்தவரையில் உங்கள் நண்பர்கள் இந்தக் கேள்விகளைப் படிக்கச் செய்யுங்கள். தமிழ் இலக்கியத்துக்கு நீங்கள் செய்யும் சிறு தொண்டாக அது இருக்கலாம்.

Monday, October 20, 2008

முதன் முதலாய்...

வெகு நாளைய ஏக்கம் தீர்ந்த சந்தோஷம். தமிழில் எனது முதல் வலைப்பக்கம். ஆனால் ரொம்பத் தயக்கமாகவும் கொஞ்சம் பயமாகவும் இருக்கிறது. அது த‌மிழ் மீதுள்ள மட்டற்ற் ம்ரியாதையினால் தான்.
சின்ன‌ஞ்சிறு மாண‌வியாக‌க் காலெடுத்து வைக்கிறேன், உங்க‌ள் வாழ்த்துக்க‌ளோடு.