Tuesday, March 9, 2010

வஞ்சகம்

இருண்ட கூட்டுக்குள் சுருண்டு கிட‌ந்தேன்
இமைகளே தேவையற்ற க‌ண்க‌ளோடு;
நிசப்தமும் சூன்யமும் விழுங்கிவிடும்முன்
உடைத்தெறிந்தேன் கூட்டின் க‌தவை;
முதன் முதலாக ஸ்பரிசித்த‌ ஒளி
சுட்டெரித்தது சருமத்தை;
அனுபவித்தறியா குளிர் காற்று
உடலுக்குள் கூசி உன்மத்தம் தந்தது;
புதிதாக‌ முளைத்த‌ சிற‌குக‌ளால்
விலாவில் கொஞ்ச‌ம் சுக‌மாய் வ‌லித்தது

இளைப்பாற வாவென அன்பொழுக அழைக்கின்றன
புதிதாகக் கூடொன்று செய்து வைத்து, கூகைகள்.

17 comments:

Dr.Rudhran said...

beautiful. plan the book.

Uma said...

Beautiful!

சந்தனமுல்லை said...

அருமை தீபா! Big Big World...:-)

அண்ணாமலையான் said...

ஆஹா

கவி அழகன் said...

supper

T.V.ராதாகிருஷ்ணன் said...

super

மாதவராஜ் said...

நல்லாயிருக்கு தீபா! வரிகளும் செறிவாக இருக்கின்றன. கவிதைக்கு சிறகு முளைத்துவிட்டது!

அமுதா said...

/*இளைப்பாற வாவென அன்பொழுக அழைக்கின்றன
புதிதாகக் கூடொன்று செய்து வைத்து, கூகைகள் */
வஞ்சகம் ... அருமையாக சொல்லி இருக்கீங்க

அமிர்தவர்ஷினி அம்மா said...

அமுதா said...

/*இளைப்பாற வாவென அன்பொழுக அழைக்கின்றன
புதிதாகக் கூடொன்று செய்து வைத்து, கூகைகள் */
வஞ்சகம் ... அருமையாக சொல்லி இருக்கீங்க

அதே, வழிமொழிகிறேன்.

பா.ராஜாராம் said...

ரொம்ப பிடிச்சிருக்கு தீபா.

தாமதமாயிருச்சு...

நேகாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

அன்புடன் அருணா said...

பூங்கொத்து தீபா!

Deepa said...

anaivarukkum anbum nanRiyum!
:)

அம்பிகா said...

\\நிசப்தமும் சூன்யமும் விழுங்கிவிடும்முன்
உடைத்தெறிந்தேன் கூட்டின் க‌தவை;\\

அழகா வந்திருக்கு தீபா
நேஹாவுக்கு பிறந்தநாளா?
வாழ்த்துக்களும், அன்பும்.

sathishsangkavi.blogspot.com said...

//முதன் முதலாக ஸ்பரிசித்த‌ ஒளி
சுட்டெரித்தது சருமத்தை;
அனுபவித்தறியா குளிர் காற்று
உடலுக்குள் கூசி உன்மத்தம் தந்தது;//

கவிதையும் அதன் வரிகளும் அழகோ அழகு...

andal said...

excellent !

appattuvilai alex said...

Dear deepa You have really a very good sense of humor. This is my first time visiting your blog.

vidivelli said...

அழகு நிறைந்த கவிதை...........
வாசித்தேன்...........
.வசதியிருந்தால் நம்ம பக்கமும் வரலாம்தானே..........