Thursday, February 18, 2010

பிரியாவிடை

விட்டு விடுத‌லையாகிப் ப‌ற‌க்க‌த் தொட‌ங்குகிறேன்
கீழே நின்று துப்பாக்கியால் குறி வைக்கிறாய்
சுடுவ‌தானால்...

என் கால்க‌ளைச் சுடு;
நான் த‌ரையிற‌ங்க‌வே விரும்ப‌வில்லை

என் க‌ண்க‌ளைச் சுடு;
அக‌க்க‌ண்ணின் வ‌ழிகாட்ட‌லில் காற்றின் திசைய‌றிவேன் நான்

என் வயிற்றில் சுடு;
எரியும் இதய‌த்தின் குருதி குடித்துப்
ப‌சியாறும் வ‌ழிய‌றிவேன்

என் சிற‌குக‌ளை ம‌ட்டும் சுட்டுவிடாதே...
இன்னொரு யுக‌ம் காத்திருக்க‌ வேண்டும் நான்.

19 comments:

Prabu M said...

//என் சிற‌குக‌ளை ம‌ட்டும் சுட்டுவிடாதே...
இன்னொரு யுக‌ம் காத்திருக்க‌ வேண்டும் நான்//

wow!!

Anonymous said...

//என் சிற‌குக‌ளை ம‌ட்டும் சுட்டுவிடாதே...
இன்னொரு யுக‌ம் காத்திருக்க‌ வேண்டும் நான்

அருமையான வரிகள் நல்ல கவிதை

T.V.ராதாகிருஷ்ணன் said...

great Deepa

Thenammai Lakshmanan said...

உண்மை தீபா சிறகுகள் இல்லாவிட்டால் வாழ்வதற்கே அர்த்தமில்லை

ராகவன் said...

அன்பு தீபா,

எனக்கு ரொம்ப பிடித்தது இந்த கவிதை...
எத்தனை கனமாக இருக்கிறது படிமங்களுடன்.

அன்பும் வாழ்த்தும் தீபா,

ராகவன்

பா.ராஜாராம் said...

நல்ல கவிதை தீபா!கவிதையின் முடிவில் ஒரு take-off இருக்கு.சும்மா,ஜிங்குன்னு தூக்குது.

லேபிளில்,கொடுமை என்று போட்டதுதான் கொடுமை. :-(

மதுரை சரவணன் said...

ithu ukak kavithai. siraku illaamal parakka seikirathu. nanri . vaalththukkal.

மாதவராஜ் said...

கவிதைக்கான முயற்சி. :-))))))
வாழ்த்துக்கள்.

Deepa said...

நன்றி அண்ணாமலையான்!

நன்றி பிரபு.எம்!

நன்றி nanrasitha!

நன்றி இராதாகிருஷ்ணன்!

நன்றி thenammailakshmanan!

நன்றி ராகவன்!

நன்றி ராஜாராம்!

நன்றி தியாவின் பேனா!

நன்றி சரவணன்!

நன்றி அங்கிள்!

mayu said...

அருமையான கவிதை

Radhakrishnan said...

ஹா ஹா! கொடுமை என்று இருக்கிறதே! நல்லதொரு சிந்தனை.

vidivelli said...

என் வயிற்றில் சுடு;
எரியும் இதய‌த்தின் குருதி குடித்துப்
ப‌சியாறும் வ‌ழிய‌றிவேன்

இக் கவிவரிகளின் கற்பனை பிடிச்சிருக்கு.
நன்று... நன்று....

செம்பகம்

vidivelli said...

என் வயிற்றில் சுடு;
எரியும் இதய‌த்தின் குருதி குடித்துப்
ப‌சியாறும் வ‌ழிய‌றிவேன்

இக் கவிவரிகளின் கற்பனை பிடிச்சிருக்கு.
நன்று... நன்று....
செம்பகம்

vidivelli said...

இக் கவிவரிகளின் கற்பனை பிடிச்சிருக்கு.
நன்று... நன்று....
செம்பகம்

vidivelli said...

இக் கவிவரிகளின் கற்பனை பிடிச்சிருக்கு.
நன்று... நன்று....
செம்பகம்

vidivelli said...

இக் கவிவரிகளின் கற்பனை பிடிச்சிருக்கு.
நன்று... நன்று....
செம்பகம்

☀நான் ஆதவன்☀ said...

கவிதையா என்று தெரியவில்லை..பட் ரொம்ப நல்லாயிருக்கு

அமுதா said...

/*என் சிற‌குக‌ளை ம‌ட்டும் சுட்டுவிடாதே...
இன்னொரு யுக‌ம் காத்திருக்க‌ வேண்டும் நான்*/
அருமையான வரிகள்

அம்பிகா said...

நல்லாயிருக்கு தீபா.
\\லேபிளில்,கொடுமை என்று போட்டதுதான் கொடுமை.\\
வழிமொழிகிறேன்