Wednesday, February 3, 2010

அலைகள்

இருக்குமிடம் தெரியாமல் அமைதியாயிருந்தது குழந்தை
ஓடிச் சென்று பார்த்தால் சத்தமில்லாமல் சோப்பைத் தின்று கொண்டிருந்தது!
செல்லமாய் அடி கொடுத்து இழுத்து வந்தேன்;
சலனமின்றி அமைதியாய் இருப்பதாக நினைத்தேன்...
செல்லமாய் அல்ல, மனத்தை முரட்டுத் தனமாகத் தான் அடிக்க வேண்டி இருக்கிறது!

17 comments:

Dr.Rudhran said...

wag a finger at a child, never touch it with an intent to hurt. the child loves your finger too.... even if it pinches.

அண்ணாமலையான் said...

இப்டித்தான் என் ஃப்ரண்ட்டோட பொண்ணு சத்தத்தையே ஒரு நாள் கானோம், என்னன்னு போய் பாத்தா வீட்ல இருந்த எல்லா அரிசியும் ஒரே அரிசியா கலந்துட்டுருக்கு கொழந்த...

Radhakrishnan said...

நல்லதொரு சுய சிந்தனையுள்ள கவிதை சகோதரி.

துபாய் ராஜா said...

நல்ல முயற்சி.

க.பாலாசி said...

உண்மைதான்...

நல்ல கவிதை...

மாதவராஜ் said...

எல்லொரும் பெற்றோர்களாயிருந்தாலும், எல்லோரும் கவிஞர்களாய் இருப்பதில்லை. ஆனால் எல்லா குழந்தைகளும் கவிதைகளாகவே இருக்கின்றனர்.

வணக்கம் கவிதாயினி!

Kumky said...

வணக்கம் கவிதா.....யினி...

Deepa said...

Thank you Doctor!
I won't hit my daughter, I promise.

நன்றி அண்ணாமலையான்!
:-) சமத்துக் குழந்தை.

நன்றி இராதாகிருஷ்ணன்!

நன்றி துபாய்ராஜா!

நன்றி பாலாசி!

அங்கிள்!
கும்க்கி!

மிக்க நன்றி.
நீங்கள் எவ்வளவு தான் கிண்டல் பண்ணாலும் நான் கொடுமை பண்றதை நிறுத்த மாட்டேன்.
:-)

Kumky said...

பாருங்க...கிண்டலா பன்னினேன்....

கவி ...தா...இனி
அப்படின்னு போட வேண்டியது....

தொடருங்கள் இனி கவிதையை என்றுதானே அர்த்தம் வருகிறது..?

கவி அழகன் said...

நல்ல இருக்கு

Deepa said...

கும்க்கி!
ஆஹா...கலக்கிட்டீங்களே.

நன்றி கவிக்கிழவன்!

☀நான் ஆதவன்☀ said...

அழகு கவிதை :)

மாதவராஜ் said...

கும்க்கி!
எப்படி இப்படியெல்லாம்.....!

ப்ரியமுடன் வசந்த் said...

பிழைத்திருத்தத்திற்க்கு வருந்தவேண்டியதுதான் திருத்திய திருப்தியிருக்கு தானே...!

சந்தனமுல்லை said...

:-) Gud one!

பின்னூட்டங்கள் ஜாலியா இருக்கே! கவி...தா...இனி....:-))

sathishsangkavi.blogspot.com said...

நல்ல கவிதை சகோதரி....

அமுதா said...

/*மனத்தை முரட்டுத் தனமாகத் தான் அடிக்க வேண்டி இருக்கிறது!*/
:-( சேம் ப்ளட்