Thursday, October 23, 2008

நேஹாவுக்கு...!

சின்னஞ்சிறிய உனது கைகள் தூக்கி காற்றில் அளாவுகிறாய். தண்டை சப்தமிடும் உனது பிஞ்சுக்கால்களைத் தரையை உதைத்து உதைத்து எழுப்புகிறாய்.
விண்ணைத்தொடும் கனவுகள் காண இப்போதிலிருந்தே தொடங்கி விட்டாயா? கனவு காண்; அஞ்சாதே! யார் சொல்லியும், எதற்காகவும் உன் கனவுகளை விட்டுக் கொடுக்காதே!
ஆனால் கொஞ்சம் நிதானி மகளே! ஏனென்றால் உன் கனவுகள் உனக்கு மட்டுமே சொந்தமானவை. ஆம்! இப்படி சொல்வதற்காக கோபப்படாதே. அவ்வாறு நம்பினால் மட்டுமே உன் கனவுகளை நிறைவேற்றும் உறுதியும் துணிவும் நீ அடைய முடியும்.
உன் க‌ன‌வுக‌ள் ம‌க‌த்தான‌தாக‌ இருக்க‌ வேண்டும் என்ப‌து ம‌ட்டுமே உன்னைப் ப‌ற்றி நான் காணும் க‌ன‌வு! வாழ்த்துக்க‌ள் க‌ண்ணே.

Wednesday, October 22, 2008

சினிமா ரசிகரா நீங்கள்? மதுமிதாவின் அதிரடிக் கேள்விக் கணைக்குப் பதில் அளித்து மகிழுங்கள்! http://madhumithaa.blogspot.com/2008/10/blog-post_21.html

நான் ஆடிய ஆட்டம் இதோ!

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்?
2 அல்லது 3 வயதிருக்கலாம். எனக்கும் டிக்கெட் எடுத்து அழைத்துச் செல்வார்கள் வீட்டில். தண்டம்! படம் தொடங்கியதும் தூங்க ஆரம்பித்து விடுவேன்.


1. அ. நினைவு தெரிந்து கண்ட முதல் சினிமா?
தூங்காமல் ரசித்த முதல் படம் ச‌ரியாக நினைவில்லை. ஞாயிறு மாலை தூர்தர்ஷனில் ஒளிபரப்பப்படும் பல பழைய பட்ங்கள் வீட்டில் அனைவருடனும் அமர்ந்து ரசித்ததுண்டு. (குறிப்பாக அக்காவுடன்!)


2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா? கல்லூரி. என் மகள் 8வ‌து மாதம் வயிற்றில் இருந்தபோது ஜோவுடன் (என் கணவர்) பார்த்தது. நல்ல‌ படம். விமர்சனம் என் ஆங்கிலப் பக்கத்தில்: http://deepajoe.blogspot.com/2008/01/i-am-great-fan-of-balaji-sakthivel-ever.html


3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்? வெள்ளித்திரை. அக்கா வீட்டில். நல்ல கதை. பண்பட்ட கருத்துக்கள். அருமையான நடிப்பு (பிரகாஷ் ராஜ்)


4. மிகவும் தாக்கிய தமிழ் சினிமா? - காதல், வீடு


5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ் சினிமா-அரசியல் சம்பவம்? சினிமா கதாநாயகர்களை நிஜ நாயகர்களாக அப்பாவி மக்கள் நம்பி ஏமாறுவது.

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ் சினிமா - தொழில்நுட்ப சம்பவம்?தொழில்நுட்பம் பற்றியெல்லாம் ரொம்ப அக்கறை இல்லை. காதலன் படத்தில் முக்காலா பாட்டு பார்த்து அதிசயித்திருக்கிறேன்.



6. தமி்ழ் சினிமா பற்றி வாசிப்பதுண்டா? ஹும்! எந்தப் பத்திரிகையை எடுத்தாலும் சினிமா செய்திகள் தானே. வாசிப்பதுண்டு!


7. தமிழ் சினிமா இசை?நல்ல இசை ரசிகர்களுக்கு முன்பு விருந்தாக இருந்தது. இப்போது மருந்து போல் அரிதாகிக்கொண்டு வருகிறது. ஆனாலும் நம்பிக்கை தருகிற இசை அமைப்பளர்களும் கவிஞர்களும் இன்னும் உண்டு.
பிடித்த பாடல்கள் பற்றி நானும் த்னியே எழுதுகிறேன்!

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

ஹிந்தி:

காமோஷி -‍ காது கேளாத பெற்றோருக்கு மகளகப் பிறந்து பெரிய பாடகியாகும் பெண்ணின் கதை. மனிஷா கொய்ராலா, நானா படேகர்.

ஹம் ஆப்கே ஹை கோன் ‍- பாட்டுக்கும் கூத்துக்கும் மட்டுமே ரசிக்கலாம்!

அப்புறம், வெகு சமீப காலமாகத் தான் ஆங்கிலப் பட‌ங்கள் பார்க்கிறேன். அதுவும் பெரும்பாலும் ஹாலிவுட் படங்கள்.அதில் பிடித்தவை:

Titanic - எதுவும் சொல்லத் தேவையே இல்லை!

Father of the Bride - ஒரு தந்தை தன் மகளுக்குத் திருமணம் செய்து வைக்கும் போது ஏற்படும் அனுபவங்கள்.

Three men and a Baby - மூன்று திருமணமாகாத ஆண்களிடம் ஒரு கைக்குழந்தை வந்து சேர்கிறது.

Life is beautiful - இது ஒரு இத்தாலியப் படம். ஒரு யூத இளைஞன் தன் புத்தி சாதுரியத்தலும் நகைச்சுவைத்திறனாலும் ஒரு இத்தலியப் பெண்ணைக் காதலித்து மணக்கிறான். அதே குணாம்சங்களினால் தன் மகனை ஜெர்மன் நாஜி முகமிலிருந்து காப்பாற்றும் கதை. இந்தப்படத்தைப் பல தடவை பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் கண் கலங்கி விடுவேன்.

Color of Paradise - http://mathavaraj.blogspot.com/2008/09/blog.html

7. தமிழ் சினிமா இசை? நல்ல இசை ரசிகர்களுக்கு முன்பு விருந்தாக இருந்தது. இப்போது மருந்து போல் அரிதாகிக்கொண்டு வருகிறது. ஆனாலும் நம்பிக்கை தருகிற இசை அமைப்பளர்களும் கவிஞர்களும் இன்னும் உண்டு.

9. தமிழ் சினிமா உலகுடன் நேரடித் தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச் சினிமா மேம்பட அது உதவுமா?

இல்லை.

10. தமிழ் சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
வெகு சில பட்ங்கள் நம்பிக்கை தருவனவாக இருக்கின்றன. ஒரு பக்கம் எப்போது இல்லாத அளவு நல்ல படங்கள் வெற்றி பெறுகின்றன. அதே அளவு வியாபாரத்துக்காக மட்டுமே எடுக்கப்படும் குப்பைகளும் பெருமளவில் வெற்றி பெறுகின்றன.
ஆனால் பொதுவாகப் பெண்களின் நிலை படுமோசமாக உள்ளது. தேசிய விருது பெற்ற ஒரு நடிகை அப்படி ஒரு சிறந்த பாத்திரத்தில் நடித்ததற்காக வருந்தும் நிலையில் இருக்கிறார். பெரிய நடிகர்கள் குத்தாட்டம் போட அழைப்பதில்லை என்பதே அவரின் மிகப் பெரிய சோகம். அவரைச் சொல்லிக் குற்றமில்லை. அப்படித்தான் இருக்கிறது தமிழ்ச் சினிமா உலகம்.
ஆகவே பட்ங்களின் தரம் உயர்ந்தாலும் சினிமா உலகில் (எந்தத் துறையையும் போல்) பெண்களின் நிலை சரியாக (உயர்வது அடுத்த படி!) இன்னும் பல காலம் பிடிக்கும். நம்புவோம்!

Tuesday, October 21, 2008

பதில்களை விடவும் கேள்விகள் முக்கியமானவை


எழுத்தாளர் திரு மாதவராஜ் அவர்களின் கேள்விகளுக்கு எனது பதில்கள்:

1. நீங்கள் படிக்க நேர்ந்த முதல் நாவல் எது ? ஏதோ ஒரு பாக்கெட் நாவ‌ல். ராஜேஷ் குமாரோ ராஜேந்திர‌ குமாரோ நினைவில்லை.


2. எந்த வயதிலிருந்து நாவல்கள் படிக்க ஆரம்பித்தீர்கள்?
8 அல்ல‌து 9 வ‌ய‌தில்.

3. எந்த வகையான நாவல்கள் உங்களுக்குப் பிடிக்கிறது?
அ. சமூக நாவல்கள்
இ. ஹரிபாட்டர் _ இதற்கு ம‌ட்டும் நான் தீவிர‌ ர‌சிகை. இவ்வ‌கையான‌ எல்லா நாவ‌ல்க‌ளும் அல்ல‌.


4. ஒரு நாவலை எப்படி படிக்க தேர்ந்தெடுக்கிறீர்கள்?
அ. ஏற்கனவே அந்த நாவலைப் படிக்க நேர்ந்தவர்கள் சொல்லக் கேட்டு
இ. நாவலாசிரியரின் பேரைப் பார்த்து
ஈ. நாவலின் முன்னுரையைப் படித்துப் பார்த்து


5. நாவல்களுக்கும், சிறுகதைகளுக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்று நினைக்கிறீர்கள்?
ஆ. சொல்லப்படும்ம் கதையின் கால எல்லை

6. நாவல்களைப் படிக்கிற போக்கில் குறிப்பிட்ட கதாபாத்திரங்கள் கதையின் மையப் பாத்திரமாக எப்படி உருவெடுக்கிறது?
ஆ.எழுத்தாளரின் முன்வைப்பிலிருந்து

7. ஒரு நாவலுக்கு, குறிப்பாக எத்தனை பக்கங்கள் இருக்கலாம் என்று கருதுகிறீர்கள்?
200 முத‌ல் 300


8. மிக அதிகமான பக்கங்கள் உள்ள நாவல்களைப் பார்த்ததும் என்ன தோன்றுகிறது?
அவ்வளவு அதிக‌ நேர‌ம் ஒதுக்கிப் ப‌டிக்கும் அள‌வுக்குத் த‌குதி வாய்ந்த்தா என்று யோசிப்பேன்! ஆம் எனில் விட்டு விட்டாவ‌து ப‌டித்து முடிப்பேன்.


9. நாவலின் சில அத்தியாயங்களைப் படித்ததுமே, இறுதிப்பக்கங்களுக்குச் செல்லும் வழக்கமுண்டா?
இல்லை. வேறு வ‌ழி இல்லாம‌ல் பொழுதைக்க‌ழிக்க‌ பாக்கெட் நாவ‌ல்க‌ள் ப‌டித்த‌ சில‌ ச‌ம‌ய‌ங்க‌ளில் ம‌ட்டும்.


10. எந்த சமயங்களை நாவல்கள் படிக்கத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறீர்கள்?
வீட்டில் ம‌ற்ற‌ வேலைக‌ளெல்லாம் ஓய்ந்த‌ பின்பு.


11. பாதி வரைப் படித்து, முடிக்காமல் போன நாவல்கள் எவை? ப‌ல‌ இருக்கின்ற‌ன. குல்சாரி, புத்துயிர்ப்பு, சிவகாமியின் சபதம், இன்னும் பல.


12. பெரும் எதிர்பார்ப்புடன் படித்து, பிடிக்காமல் போன நாவல்கள் எவை?
பாட்டிமார்க‌ளும் பேத்திமார்க‌ளும் _ ஜெய‌காந்த‌ன்ஒரு ம‌னித‌ன், ஒரு வீடு, ஒரு உல‌கம் _ ஜெய‌காந்த‌ன்பெர்சுவேஷ‌ன் _ ஜேன் ஆஸ்டென்


13. தாங்கள் படிக்க நினைத்து இதுவரை படிக்காமலே இருக்கிற நாவல்கள் எவை? போரும் அமைதியும் _ டால்ஸ்டாய் மோக‌முள் _ ஜான‌கிராம‌ன்

14. படித்ததில் பிடித்த பத்து தமிழ் நாவல்கள் எவை?
சில‌ நேர‌ங்க‌ளில் சில‌ ம‌னித‌ர்க‌ள், யாருக்காக அழுத்தான், எனக்காக அழு (குறுநாவல்கள்) _ ஜெய‌காந்த‌ன், காளான், siva‌ச‌ங்க‌ரி

முற்றுகை _ மேலாண்மை பொன்னுச்சாமி

15. படித்ததில் பிடித்த பத்து பிற இந்திய மொழி நாவல்கள் எவை?
காட் ஆஃப் ச்மால் திங்ஸ் _ அருந்ததி ராய்.


16. படித்ததில் பிடித்த பத்து வெளிநாட்டு நாவல்கள எவை?
Little Women, Da Vinci Code, ஜ‌மீலா, நம‌து இதய‌ங்கள், அன்னை வ‌ய‌ல், Uncle Tom's Cabin, Pride and Prejudice, Harry Potter (parts 1-6 ), Agatha Christie's many novels, Crime and Punishment

17. திரும்பத் திரும்ப படித்த நாவல்கள் எவை?

Little Women, Jamila, நம‌து இதய‌ங்கள்


18. படிக்கும் முன்னரோ, படித்த பின்னரோ நாவலின் தலைப்புகள் குறித்து யோசிப்பது உண்டா?
ஆம்
19. நாவல்களில் வந்த கதாபாத்திரங்களை தங்கள் லட்சிய மனிதர்களாக வரித்துக் கொண்டதுண்டா? அப்படி இருந்தால் குறிப்பிடுங்களேன்.

இல்லை


20. பிற மொழி நாவல்களுக்கும் தமிழ்மொழி நாவல்களுக்கும் என்ன வித்தியாசங்களை உணர்கிறீர்கள்?
கலாசாரம்


21. உலகின் பிறமொழிகளுக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும் என கருதிய தமிழ் நாவல்கள் எவை?
-
22. வாசித்ததில் தங்களது இயல்பு நிலையை வெகுவாக தொந்தரவு செய்த நாவல்கள் எவை?
ந‌ம‌து இத‌ய‌ங்க‌ள்

23. கதாபாத்திரங்களின் உரையாடல் எப்படி இருக்க வேண்டும்?
அ.எழுத்து மொழி ஆ.பேச்சு வழக்கு இ.வட்டார வழக்கு - நாவலின் தன்மையைப் பொறுத்து எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.


24. தாங்கள் இதுவரையில் வாசித்த நாவல்களில் பிடிபடும் பொதுத்தன்மைகள் எவை எவை? பெண்களின் மனதின் நுட்பமான உணர்வுகள், மனித நேயம்

25. எந்த நாவல்களைப் படித்ததும், அவற்றை எழுதிய எழுத்தாளரை சந்திக்க வேண்டும் என்று தோன்றியது? அப்படிஎதுவும் இல்லை.

26. தாங்கள் நாவல்களை தொடர்ந்து ஒரே மூச்சில் படிப்பீர்களா? அல்லது விட்டு விட்டு பல்வேறு சமயங்களில் படிப்பீர்களா? சூழ்நிலைய‌யும் நாவ‌லின் சுவார‌சிய‌த்தையும் பொறுத்த‌து.

27. உள்ளடக்கத்திற்காக மட்டுமின்றி மொழிநடைக்காகவே லயித்துப் படிப்பது யார் யாருடைய நாவல்களை? ஜெயகாந்த‌ன், ஹாரிபாட்ட‌ர் நாவ‌ல்க‌ள் (ஜே.கே. ரௌலிங்)

28. கதாபாத்திரங்களின் இயல்பு மீறி, நாவலாசிரியரே வலிந்து பேசுவது போல தோன்றியிருக்கிறதா. அப்படியானால், அந்த நாவல்கள் பற்றி உங்கள் அபிப்ராயம் என்னவாகிறது? அப்ப‌டி எதுவும் தோன்றிய‌தில்லை

29. நாயகத் தன்மையற்ற நாவல்களைப் படித்திருக்கிறீர்களா? குறிப்பிடுங்களேன்.
இல்லை


30. கவிதை, சிறுகதைகளைத் தாண்டி, நாவல்கள்தான் இலக்கியத்தின் உச்சம் என்று கருதுகிறீர்களா? இல்லை. சிறுக‌தைக‌ள் தாம் என்னை அதிக‌ம் பாதித்திருக்கின்ற‌ன‌.

31. தாங்கள் கடைசியாக படித்த தமிழ்நாவல் எது? :-) வெகு நாட்க‌ள் ஆகின்ற‌ன‌... ப‌டிக்க‌ வேண்டும்!

32. நாமும் ஒரு நாவல் எழுதவேண்டும் என்று உங்களுக்குத் தோன்றுவதுண்டா?
உண்டு.

33. நாவல்கள் எழுதத் தோன்றினாலும் ஏன் இதுநாள் வரையிலும் எழுதவில்லை? அந்த‌த் த‌குதியை முத‌லில் வ‌ள‌ர்த்துக் கொள்ள‌ வேண்டும். ந‌ல்ல‌ க‌ருப்பொருள் கிடைக்க‌ வேண்டும்.

சரி. படித்து விட்டீர்களா? முடிந்தால் நேர்மையாக பதில் சொல்லுங்கள். அல்லது நேர்மையாக மௌனமயிருங்கள். ஆனாலும் ஒன்றை நீங்கள் கண்டிப்பாக செய்தாக வேண்டும். முடிந்தவரையில் உங்கள் நண்பர்கள் இந்தக் கேள்விகளைப் படிக்கச் செய்யுங்கள். தமிழ் இலக்கியத்துக்கு நீங்கள் செய்யும் சிறு தொண்டாக அது இருக்கலாம்.

Monday, October 20, 2008

முதன் முதலாய்...

வெகு நாளைய ஏக்கம் தீர்ந்த சந்தோஷம். தமிழில் எனது முதல் வலைப்பக்கம். ஆனால் ரொம்பத் தயக்கமாகவும் கொஞ்சம் பயமாகவும் இருக்கிறது. அது த‌மிழ் மீதுள்ள மட்டற்ற் ம்ரியாதையினால் தான்.
சின்ன‌ஞ்சிறு மாண‌வியாக‌க் காலெடுத்து வைக்கிறேன், உங்க‌ள் வாழ்த்துக்க‌ளோடு.